விமானச் சேவைகளில் பயண மாற்றம்

கொழும்பு மற்றும் லண்டன் நகரங்களுக்கிடையிலான விமானச் சேவைகளில் பயண மாற்றம்

by Staff Writer 06-10-2024 | 6:33 PM

Colombo (News 1st) கொழும்பு மற்றும் லண்டன் நகரங்களுக்கிடையிலான விமானச் சேவைகளில் பயண மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை அதிகரித்துச் செல்வதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை லண்டன் நோக்கிச்சென்ற விமானங்கள் ஈராக் வான்மார்க்கத்தினூடாகவே பயணித்தன.

எனினும் இஸ்ரேலினால் ஈரான் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுவரும் நிலையில் பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி பயண மார்க்கத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

இதற்கமைவாக லண்டன் நோக்கி பயணிக்கும் விமானங்கள் தற்போது எகிப்து வான்மார்க்கத்தின் ஊடாக பயணிக்கவுள்ளன.

இதனால் 30 நிமிட தாமதத்துடன் விமான நேரம் நீடிக்குமென ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.