கைத்தொழில் துறையின் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை

கைத்தொழில் துறையின் ஏற்றுமதியை 20 வீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை - கைத்தொழில் அமைச்சு

by Staff Writer 06-10-2024 | 8:43 PM

Colombo (News 1st) இவ்வருடம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கைத்தொழில் துறையின் ஏற்றுமதியை 20 வீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

கிராமிய உற்பத்தியாளர் படையணியை 7 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கைத்தொழில் துறையில் இணையும் இளம் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவிருப்பதுடன் நவீன தொழில்நுட்பம் குறித்து அவர்களுக்கு தௌிவூட்டல்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.