இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம்

by Staff Writer 28-09-2024 | 8:33 PM

Colombo (News 1st) இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி சங்கத்தின் சட்டத்தரணிகள் பேரவை இன்று(28) கூடிய போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் சட்டத்தரணி அனுர மெத்தேகொட, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவராக பதவி வகித்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணி ராஸிக் ஸருக், சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து கௌஷல்ய நவரத்ன அண்மையில் விலகியமை குறிப்பிடத்தக்கது.