தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களுக்குள் வௌியிட எதிர்பார்ப்பு - பரீட்சைகள் திணைக்களம்

by Staff Writer 15-09-2024 | 7:57 PM

Colombo (News 1st) தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை 40 நாட்களுக்குள் வௌியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை(16) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(15) இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் 2849 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெற்றதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு 323,879 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.