ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 1300 முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 1300 முறைப்பாடுகள் - PAFFREL

by Staff Writer 15-09-2024 | 2:22 PM

Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 1300-இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக PAFFREL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இவற்றில் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 62 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் 19 தாக்குதல் சம்பவங்களும் அலுவலகங்கள் மீதான 27 தாக்குதல் சம்பவங்களும் உள்ளடங்குவதாக அவர் கூறியுள்ளார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து வகையான பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக கூறியுள்ள ரோஹண ஹெட்டியாரச்சி, இந்த காலப்பகுதியில் அமைதியான முறையில் செயற்படுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில் 150-இற்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.