Colombo (News 1st) கிளிநொச்சி - இராமநாதபுரம் வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு்குள்ளாகியுள்ளது.
இதன்போது பலத்த காயமடைந்த 21 வயதான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே, மஹியங்கனை - பதுளை பிரதான வீதியின் எலேவெல பகுதியில் காரொன்று முச்சக்கர வண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
மஹியங்கனையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த கார், வீதியை விட்டு விலகி நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பின்னால் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கர வண்டியில் இருந்த 24 வயதான யுவதி உயிரிழந்துள்ளார்.
கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்திற்கான காரணமென பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.