Colombo (News1t) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மஹாநாம பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று(12) ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள ஒத்துழைத்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த வருடம் செப்டெம்பர் 17ஆம் திகதி உத்திக்க பிரேமரத்னவின் கார் மீது அனுராதபுரத்தில் அவரது வீட்டிற்கு முன்பாக துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.