தற்காலிகமாக மூடப்பட்ட ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

தற்காலிகமாக மூடப்பட்ட ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

by Staff Writer 12-09-2024 | 7:48 PM

Colombo (News1st) ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு இன்று(12) தீர்மானிக்கப்பட்டது.

அனைத்து மாணவர்களும் இன்று மாலை 06 மணிக்கு முன்னர் பல்கலைக்கழகத்திலிருந்து வௌியேற வேண்டுமென ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பத்மலால் எம் மானகே பிற்பகலில் அறிவித்துள்ளார்.

விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களும் இன்று மாலை 06 மணிக்கு முன்னர் வௌியேற வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

இந்த அறிவுறுத்தலை மீறி பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் மாணவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பேராசிரியர் பத்மலால் எம் மானகே எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இரண்டு மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.