வியட்நாமை தாக்கிய சூறாவளியால் 82 பேர் உயிரிழப்பு

வியட்நாமை தாக்கிய சூறாவளியால் 82 பேர் உயிரிழப்பு

by Staff Writer 10-09-2024 | 5:39 PM

Colombo (News 1st) வியட்நாமை தாக்கிய சூறாவளியில் சிக்கி குறைந்தது 82 பேர் உயிரிழந்துள்ளனர்.

வியட்நாமின் வடகிழக்கு கரையை தாக்கிய சூறாவளியால் மண்சரிவு மற்றும் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக மில்லியன் கணக்கான குடியிருப்புகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, தொலைத்தொடர்பு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.