சா/த பெறுபேறுகளை விரைவாக வௌியிட நடவடிக்கை

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை விரைவாக வௌியிட நடவடிக்கை - பரீட்சைகள் திணைக்களம்

by Staff Writer 10-09-2024 | 3:53 PM

Colombo (News 1st) 2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை விரைவாக வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இம்முறை சாதாரண தர பரீட்சையில் 387,648 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65,331 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தனர்.