17 மாணவர்கள் பலியான கென்ய தீவிபத்து

கென்யாவில் பாடசாலை விடுதியில் தீவிபத்து - 70 பேரை காணவில்லை

by Staff Writer 07-09-2024 | 4:03 PM

​Colombo (News1st) கென்யாவில் பாடசாலை விடுதியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் காணாமல்போன 70 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கென்ய தலைநகர் நைரோபியிலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றிலேயே இந்த தீவிபத்து இடம்பெற்றுள்ளது.

தீவிபத்தில் சிக்கி 17 பேர் வரை உயிரிழந்ததாக கென்ய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

9 முதல் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களே இந்த விபத்தில் பலியானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

நள்ளிரவில் தீப்பரவல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த விடுதியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தீவிபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த விடுதியில் அதிக நெரிசல் காணப்பட்டமை மற்றும்  தங்குமிட பாதுகாப்பு தரங்களை முறையாக பேணாமை உள்ளிட்ட காரணிகளால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாமென  கென்ய பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.