பஸ் விபத்திற்குள்ளானதில் 28 யாத்திரிகர்கள் பலி

பாகிஸ்தான் யாத்திரிகர்கள் பயணித்த பஸ் ஈரானில் விபத்து ; 28 பேர் உயிரிழப்பு

by Staff Writer 21-08-2024 | 3:43 PM

Colombo (News 1st) பாகிஸ்தானை சேர்ந்த யாத்திரிகர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்று ஈரானின்Yazd மாகாணத்தில் விபத்திற்குள்ளானதில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

மேலும் 23 பயணிகள் காயமழடந்துள்ளதுடன் அவர்களில் 14 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

பக்தர்கள் பாகிஸ்தானின் Sindh மாகாணத்திலிருந்து ஈரானின் Karbala நகரம் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.