சிறுபோகத்தின் பின்னர் பயறு பயிரிட திட்டம்

சிறுபோகத்தின் பின்னர் பயறு பயிரிட திட்டம்

by Staff Writer 25-07-2024 | 6:54 AM

Colombo (News 1st) 2024ஆம் ஆண்டுக்கான சிறுபோகம் முடிவடைந்தவுடன் பயறு பயிரிடும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

2024 சிறுபோகத்தில் இதுவரை 4464 ஹெக்டேயர் பயறு பயிரிடப்பட்டுள்ளது. 

இதன்மூலம் 6500 மெட்ரிக் தொன் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகின்றது.

மூன்றாவது போகமாக இடைப்பட்ட போகத்தில், 8943 ஹெக்டேயரில் பயறு பயிரிப்படவுள்ளது.