அமரர் திரு ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம்

by Staff Writer 25-07-2024 | 12:10 PM

Colombo (News 1st) வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் முன்னாள் தலைவர் அமரர் திரு ஆர்.ராஜமகேந்திரன் அவர்கள் மறைந்து இன்றுடன் 3 ஆண்டுகள். 

அவரை நினைவுகூரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் இன்று(25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

கொழும்பு பிரேபுரூக் பிளேஸில் உள்ள சிரச ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் மகா சங்கத்தினருக்கு தானம் வழங்கி வைக்கப்பட்டன. 

இன்று காலை இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்திலும் அதன் ஊழியர்களின் பங்களிப்புடன் இரத்ததான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. 

முன்னாள் தலைவரின் நினைவேந்தல் நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றன. 

பிலியந்தலை இளம் பௌத்த சங்கத்தினால் நடத்தப்படும் சலினா அல்விஸ் குணரத்ன முதியோர் இல்லத்திற்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. 

ஏ.எஃப்.ஜோன்ஸ் நிறுவனம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. 

வெல்லம்பிட்டியில் அமைந்துள்ள இந்த சிறுவர் இல்லத்தில் விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியையும் ஏ.எப்.ஜோன்ஸ் நிறுவனம் முன்னெடுத்தது. 

மற்றொரு நிகழ்வு ​ஹெந்தல ப்ரீதிபுர சிறுவர் இல்லத்தில் நடைபெற்றது. 

அங்குள்ள குழந்தைகளுக்கு இதன்போது உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

இதேவேளை, திஸ்ஸமகாராம கவுந்திஸ்ஸபுர தம்மவிஜய விகாரையில் மற்றுமொரு நிகழ்வு இடம்பெற்றது.