Colombo (News 1st) மட்டக்களப்பு - குருக்கள்மடம் கடற்கரை பகுதியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.