Colombo (News 1st) ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு நுவரெலியாவில் பயிரிடப்பட்ட ஸ்ட்ராபெரி செய்கை(Strawberry) வெற்றியளித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மாதிரி செய்கை அரச அனுசரணையில் முன்னெடுக்கப்படும் முதலாவது திட்டமாகும்.
நுவரெலியாவின் பிளாக்பூல் பகுதியில் 52 விவசாயிகளின் பங்களிப்புடன் 40 பசுமை இல்லங்களில் இந்த பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.