![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் காலஞ்சென்ற, இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலைக்கு இன்று(05) கொண்டு செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் பூதவுடல் யாழ்ப்பாணத்திலிருந்து விமானம் மூலமாக சீனன்குடா விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
திருகோணமலை நகரில் தபாற்கந்தோர் வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திற்கு பூதவுடல் வாகனப் பேரணியாக கொண்டுச் செல்லப்பட்டது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் நடைபெறவுள்ளன.