கொழும்பின் பல பகுதிகளில் நாளை (29) நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (29) நீர்வெட்டு

by Bella Dalima 28-06-2024 | 4:59 PM

Colombo (News 1st) கொழும்பின் பல பகுதிகளில் நாளை (29)  காலை 9 மணி முதல் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவளை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் மஹரகம, பொரலஸ்கமுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் மொரட்டுவை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மின்சக்தியூடாக முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக அம்பத்தலே குடிநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பிற்கான மின் விநியோகம் தடைப்படுகின்றமை மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.