![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகர் பொறுப்பிலிருந்து மஹேல ஜெயவர்தன விலகியுள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மஹேல ஜயவர்தன தனது பதவிக் காலத்தில் இலங்கை தேசிய அணியின் கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கும் முக்கியமான மாற்றங்களை அமுல்படுத்துவதற்கும் உதவி புரிந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.