![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வூட் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ் சில்வர்வூட்டின் பயிற்சியின் கீழ் இலங்கை அணி 2022ஆம் ஆண்டு ஆசிய கிண்ணத்தை சுவீகரித்ததுடன், 2023ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இரண்டாமிடத்தை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.