அதிபர், ஆசிரியர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கை

அதிபர், ஆசிரியர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கை

by Staff Writer 26-06-2024 | 9:23 AM

Colombo (News 1st) ஆசிரியர் - அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் இன்று(26) சுகவீன விடுமுறையை பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள முரண்பாட்டிற்கான தீர்வு இன்னும் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று(260 காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பால் பாடசாலை கல்வி செயற்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று 56ஆவது நாளாக தொடர்கின்றது.

அரச சம்பள ஆணைக்குழுவுடன் நேற்று(25) மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில் பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானித்ததாக பல்கலைகழக கல்விசாரா தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைத்தலைவர் தம்மிக எஸ்.பிரியந்த தெரிவித்துள்ளார்.