தென் கொரிய மின்கல உற்பத்தி தொழிற்சாலையில் தீ

தென் கொரிய மின்கல உற்பத்தி தொழிற்சாலையில் தீ ; 16 பேர் உயிரிழப்பு

by Staff Writer 24-06-2024 | 3:41 PM

Colombo (News 1st) தென் கொரியாவிலுள்ள இலித்தியம் மின்கல உற்பத்தி தொழிற்சாலையில் பரவிய தீயில் சிக்கி குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் சியோலில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் இன்று(24) தீ விபத்து பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 35000 யுனிட்களை கொண்ட களஞ்சிய பகுதிக்குள் மின்கலங்கள் வெடித்ததை அடுத்து தீப்பரவல் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.