கெஹெலிய உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 03-06-2024 | 3:50 PM

Colombo (News 1st) மருந்து மோசடி சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேகநபர்களும் தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கின் நான்காவது சந்தேகநபரான மருந்து வழங்கல் பிரிவின் முன்னாள் கணக்காய்வாளர் நெராங் தனஞ்ஜயவை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று(03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.