![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவின் வட்டவன் பகுதியில் இன்று(23) அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த கணவன், மனைவி, இரண்டு பிள்ளைகள் ஆகியோர் மட்டக்களப்பு நோக்கி பயணித்த போதே கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன், 4 வயது சிறுவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த சிறுவன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.