![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளன.
மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பை சோந்த 25 வயதான ஹரிகரன் கிருஷ்ணவேணி என்ற தாய் இந்த சிசுக்களை பிரசவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆண் சிசுவும் 3 பெண் சிசுக்களும் அடங்கலாக நான்கு சிசுக்களை குறித்த தாய் பிரசவித்துள்ளார்.
குறித்த தாயும் சிசுக்களும் நலமாக உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.