மின்னல் தாக்கி 4 மீனவர்கள் காயம்; ஒருவரை காணவில்லை

மட்டக்களப்பில் மின்னல் தாக்கி 4 மீனவர்கள் காயம்; ஒருவரை காணவில்லை

by Staff Writer 25-10-2022 | 6:03 PM

Colombo (News 1st) மட்டக்களப்பு முகத்துவாரத்தில் ​நேற்று (24) மாலை மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து மீனவர்கள் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளனர்.

இதன்போது நால்வர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.

காணாமற்போன மீனவரை தேடுவதற்கு இலங்கை கடற்படையின் உதவியை கோரியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மின்னல் தாக்கத்திற்குள்ளாகி காயமடைந்த ஐவரில் மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

மற்றுமொரு மீனவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

மட்டக்களப்பு திராய்மடுவை சேர்ந்த மீனவர்களே நேற்று மாலை மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.