லலித் - குகன் வழக்கு : கோட்டாபயவிற்கு உத்தரவு

லலித் - குகன் வழக்கு - முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு விடுக்கப்பட்ட உத்தரவு

by Staff Writer 07-08-2026 | 12:51 PM

லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கமைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை அடுத்த மாதம் 29 ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றிலிருந்து ஒன்லைன் ஊடாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு சாட்சியம் அளிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு 

யாழ்ப்பாணம் பிரதம நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

2011 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் குறித்த இருவரும் கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

குறித்த காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.