அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் கரந்தெனிய சுத்தாவின் மைத்துனர் உயிரிழப்பு

by Staff Writer 04-11-2025 | 3:11 PM

Colombo (News 1st)  அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தை அண்மித்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 'கரந்தெனிய சுத்தா' எனும் நபரின் மைத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் வந்த சிலர் நகர சபை வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 04 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.