.webp)
(Colombo News1st) அம்பேகம ஆரம்ப பாடசாலை நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி
தாபோ ம்பெக்கி தலைமையில்..
கம்மெத்த நாட்டு மக்களின் தேவைகளை கண்டறிந்து நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தை கடந்த ஒரு தசாப்த காலமாக முன்னெடுக்கின்றது.
மற்றுமொரு வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(29) இடம்பெறவுள்ளது.
காலி எல்பிட்டி கல்வி வலயத்தில் வெலிவிட்டிய திவிதுர கல்வி வலயத்தின் அம்பேகம ஆரம்ப பாடசாலையில் 600 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
கல்வியிலும் இணைப் பாடவிதானங்களிலும் திறமையை வௌிப்படுத்தும் இந்த மாணவர்களுக்கு
நூலகம் இல்லாதது பாரிய குறைபாடாகும்.
பாடசாலை சமூகத்தினரின் கோரிக்கைகளுக்கு அமைய, முழுமையாக வசதிகள் கொண்ட நூலகத்தை அமைத்துக்கொடுக்க கம்மெத்த இன்று பணிகளை ஆரம்பிக்க தயாராகியுள்ளது.
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தாபோ ம்பெக்கி தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
கம்மெத்த பொது நிதியத்தின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்படும்
இந்த நூலகத்திற்கு "தாபோ ம்பெக்கி நூலகம்" என பெயரிடப்படவுள்ளது.