.webp)
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் 2 பெண்களின் விளக்கமறியல் உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
மூவரும் எதிர்வரும் ஜூலை 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளவத்தை சொகுசு தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியில் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் துமிந்த திசாநாயக்க மற்றும் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு கல்கிசை நீதவான் சத்துரிக்கா டி சில்வா முன்னிலையில் இன்று(26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த துமிந்த திசாநாயக்கவின் சமையல்காரர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிப்பதற்கு நீதவான் உத்தரவிட்டார்.