.webp)
Colombo (News 1st) மலையாள திரைப்படமான திரிஷ்யத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தென்னிந்திய நட்சத்திர நடிகரான மோகன்லாலை சந்தித்தமை தமது வாழ்க்கையின் மிக முக்கிய தருணங்களில் ஒன்றாகும் என இலங்கை நடிகர் பிமல் ஜயகொடி தெரிவித்துள்ளார்.
மோகன்லாலின் ஆசி தர்மயுத்தய-2 படப்பிடிப்பிற்கு ஊக்கமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலையாள நட்சத்திர நடிகர் மோகன்லால் விஸ்வநாதன் மற்றும் இலங்கை நடிகர் பிமல் ஜயகொடி ஆகியோர் கொழும்பு Galle Face Hotel-இல் சந்தித்து கலந்துரையாடினர்.
இருவேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் இருவரின் சந்திப்பு சினிமா துறையில் விசேட அம்சமாகவுள்ளது.
இலங்கை தயாரிப்பான தர்மயுத்தய-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இவர்களிருவரும் சந்தித்துள்ளனர்.
தர்மயுத்தய-2 திரைப்படமானது நடிகர் மோகன்லால் நடிப்பில் வௌியான திரிஷ்யம் 2-இன் ரீமேக் ஆகும்.
மோகன்லால் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரிஷ்யம்-3 திரைப்பட படப்பிடிப்பை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக நடிகர் மோகன்லால் இந்த சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் சுமார் 400-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள மோகன்லால் தனக்கென தனி இரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நட்சத்திர நடிகராக இந்திய சினிமாவில் வலம்வருகின்றார்.
Patriot திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக தென்னிந்திய நட்சத்திர நடிகர் மோகன்லால் விஸ்வநாதன் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.