மடு அன்னையின் ஆடி மாத திருவிழா இன்று(23) ஆரம்பம்

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா இன்று(23) ஆரம்பம்

by Staff Writer 23-06-2025 | 7:23 PM

Colombo (News 1st) மன்னார் - மருதமடு அன்னை தேவாலயத்தின் ஆடி மாத திருவிழா இன்று(23) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடியேற்றத் திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஞானப்பிரகாசம் ஆண்டகை, மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ, மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் ஆகியோர் ஒப்புக்கொடுத்தனர்.

கொடியேற்றத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இன்று முதல் எதிர்வரும் 9 நாட்களுக்கு நவநாள் ஆராதனைகள் நடைபெற்று எதிர்வரும் முதலாம் திகதி வேஸ்பர் ஆராதனையும் 2ஆம் திகதி ஆடிமாத திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.