எதிர்வரும் 30 ஆம் திகதி பாராளுமன்ற விசேட அமர்வு..

எதிர்வரும் 30 ஆம் திகதி பாராளுமன்ற விசேட அமர்வு நாளாக அறிவிப்பு

by Staff Writer 21-06-2025 | 4:52 PM

Colombo (News1st) எதிர்வரும் 30ஆம் திகதி பாராளுமன்ற விசேட அமர்வு நாளாக அறிவிக்க பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று(20) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு 44 ஆம் இலக்க அரச நிதி முகாமைத்துவச் சட்டத்தின் 11ஆம் சரத்துக்கு அமைவாக வருடாந்தம் ஜூன் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பாராளுமன்றம் கூடுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 16ஆவது சரத்துக்கு அமைவாக ஜூன் 30 ஆம் திகதி காலை 9.30 க்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.