மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் ரொஹாந்த அபேசூரிய

மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொஹாந்த அபேசூரியவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி

by Staff Writer 18-06-2025 | 7:55 PM

Colombo (News 1st) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொஹாந்த அபேசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அனுமதி ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹாந்த அபேசூரிய இதற்கு முன்னர் குற்றத்தடுப்பு பிரிவின் பிரதானியாக கடமையாற்றினார்.

இவர் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார்.