ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

by Staff Writer 07-06-2025 | 12:14 PM

ஒரு நாடாக அனைவருக்கும் சவால்களை முறியடித்து மக்கள் விரும்பும் முன்னேற்றகரமான மற்றும் நாகரிகமான நாட்டை கட்டியெழுப்புவதற்கு தேவையான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை மேற்கொள்வதில் அனைவரின் கூட்டு முயற்சி, தலையீடு மற்றும் பங்கேற்பு மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹஜ் கொண்டாட்டம் அந்த பொதுவான நோக்கத்திற்காக கைகோர்க்க ஒரு சிறந்த தளத்தை உருவாக்குவதாக ஹஜ் பெருநாளை முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உலக மக்கள் அனைவரின் இதயங்களிலும் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் தியாக உணர்வுகளை உருவாக்கும் ஹஜ் கொண்டாட்டம் உலக அமைதிக்கான ஒரு சிறந்த செய்தியாகும் என ஜனாதிபதி தமது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.