.webp)
கடந்த 10 வருடங்களில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் நாட்டிற்கு சுமார் 300 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
தொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞானப் பீடத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்தார்.
2021 முதல் 2022ஆம் ஆண்டு வரை 386 போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இதற்காக 662,388 வேலை மணித்தியாலங்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வருடாந்தம் சுமார் 35 வேலைநிறுத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.