பாடசாலைகளை நாளையும் நாளை மறுதினமும் மூட தீர்மானம்

நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் நாளையும் நாளை மறுதினமும் மூட தீர்மானம்

by Staff Writer 04-05-2025 | 3:57 PM

Colombo (News 1st) நாட்டின் சகல பாடசாலைகளையும் நாளை(05) மற்றும் நாளை மறுதினம்(06) மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், எதிர்வரும் 7ஆம் திகதி புதன்கிழமை பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.