.webp)
தெவிநுவர இரட்டை கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த 2 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 33 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 27 மற்றும் 29 வயதான இருவர் உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை துப்பாக்கிதாரி உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.