மிகுந்த கவனத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு

மிகுந்த கவனத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

by Staff Writer 12-04-2025 | 12:36 PM

Colombo (News1st) பண்டிகை காலத்தில் வௌியூர் மற்றும் தூர இடங்களுக்கு பயணிப்போர் மிகுந்த அவதானத்துடன் வாகனம் செலுத்துவது அவிசயமானது என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இதன் மூலம் திடீர் விபத்துக்களை தவிர்க்க முடியுமென சுகாதார அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த காலத்தில் புத்தாண்டின் போது 28,000 முதல் 30,000  வரையிலானவர்கள் விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்தார்.

பண்டிகை காலத்தில் ஏற்படும் விபத்துக்களினால் 75 முதல் 100 பேர் வரை உயிரிழந்ததாக பதிவாகிய தரவுகள் இருப்பதாக  அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் பாதுகாப்பான இடங்களில் விடுமுறையை களிக்குமாறும் வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.