தெவிநுவர துப்பாக்கிச்சூட்டு சம்பவம் - 4 பேர் கைது

மாத்தறை தெவிநுவர துப்பாக்கிச்சூட்டு சம்பவம் - மேலும் 4 சந்தேகநபர்கள் கைது

by Staff Writer 28-03-2025 | 10:50 AM

Colombo (News1st) மாத்தறை தெவிநுவர பகுதியில் நடத்தப்பட்ட  துப்பாக்கிச்சூட்டில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வென்னப்புவ பகுதியில் மறைந்திருந்த நிலையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த கொலைச்சம்பவம் தொடர்பில் முன்னதாக 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த 21ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது வேனில் வந்த சிலரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இதில் 28, 29 வயதான 2 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்