.webp)
Colombo (News1st) மாகாண சபைகளுக்கு சொந்தமான காணாமல் போயுள்ள வாகனங்கள் தொடர்பில் தேடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதியமைச்சர் ருவான் செனரத் தெரிவித்தார்.
குறித்த வாகனங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக குழு நியமிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மாகாண சபைகளுக்கு சொந்தமான நிறுவனங்களின் செயற்றிட்டங்களுக்காக வழங்கப்பட்ட வாகனங்கள் சில காணாமல் போயுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளமையால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.
அரசுக்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய தனிநபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதியமைச்சர் ருவான் செனரத் தெரிவித்தார்.