இலங்கை கடற்பரப்பில் 32 இந்திய மீனவர்கள் கைது

Sea of Sri Lanka கடற்பரப்பில் 32 இந்திய மீனவர்கள் கைது

by Staff Writer 23-02-2025 | 2:40 PM

Colombo (News 1st) Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 32 இந்திய மீனவர்கள் 5 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடற்பரப்பில் நேற்றிரவும் இன்று அதிகாலையும் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்தார்.

இராமேஷ்வரம் மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 131 இந்திய மீனவர்கள் 18 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.