Colombo (News 1st) மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 34 மீனவர்களுள் 19 பேருக்கு தலா 50,000 ரூபா அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
ஏனைய 15 பேரும் பயணித்த படகின் பதிவு இலக்கம் வேறுபடுவதால் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்கள் தொடர்பான வழக்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று(05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது 19 பேருக்கு தலா 50,000 ரூபா அபராதம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டதுடன் அபராதம் செலுத்த தவறின் 6 மாத கால சாதாரண சிறைத் தண்டனையும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கால சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.