Colombo (News 1st)
நவீனமயப்படுத்தப்பட்ட மாகோ - அனுராதபுரம் ரயில் மார்க்கத்தை திறக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் தாமதமடைந்துள்ளது.குறித்த மார்க்கத்திற்கான சமிக்ஞை கட்டமைப்பு இதுவரை நிறுவப்படாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
சமிக்ஞை கட்டமைப்பு இன்றி ரயிலை செலுத்துவதற்கான இயலுமை இல்லை என சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் தெரியப்படுத்தியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிலவும் சிக்கல் நிலை தொடர்பில் போக்குவரத்து அமைச்சிற்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன்
உரிய தரப்பினருடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானமொன்றை மேற்கொள்ளுமாறு இதன்போது அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டது.
மாகோ - அனுராதபுரம் ரயில் மார்க்கம் கடந்த ஜனவரி மாதம் முதல் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.