1500 பேருக்கு 1690 துப்பாக்கிகள்

நாட்டில் 1500 பேருக்கு 1690 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளது - பாதுகாப்பு அமைச்சு

by Staff Writer 06-10-2024 | 5:15 PM

Colombo (News 1st) நாட்டில் 1500 பேருக்கு 1690 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை எதிர்வரும் நவம்பர் 07ஆம் திகதிக்கு முன்னர் கடற்படையின் வெலிசறையிலுள்ள அரச வணிக வெடிபொருட்கள் களஞ்சியசாலையில் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு நேற்று முன்தினம்(04) அறிவித்திருந்தது.

துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை ஒப்படைத்ததன் பின்னர் விநியோகிக்கப்படும் பற்றுச்சீட்டின் பிரதியை பாதுகாப்பு அமைச்சின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே ஸ்தாபிக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவின் ஆவணங்களை பொறுப்பேற்கும் கருமபீடத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த தினத்திற்குள் துப்பாக்கிகளை மீளக் கையளிக்கத் தவறினால் துப்பாக்கிகள் கட்டளை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நேரிடும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.