58 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

பொதுத் தேர்தலுக்காக 58 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின - தேர்தல்கள் ஆணைக்குழு

by Staff Writer 03-10-2024 | 10:44 AM

Colombo (News 1st) எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக இதுவரை 58 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திகாமடுல்ல மற்றும் கொழும்பு தேர்தல் மாவட்டங்களிலிருந்து அதிகளவான சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

அத்துடன், பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நாளை(04) ஆரம்பமாகவுள்ளன.

அதற்கமைய, எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.