Colombo (News 1st) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.
www.donents.lk மற்றும் www.results.exams.gov.lk எனும் இணையதளங்களின் ஊடாக பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 4 இலட்சத்து 52 ஆயிரத்து 979 மாணவர்கள் தோற்றினர்.
இவர்களில் 3 இலட்சத்து 87 ஆயிரத்து 648 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.