பிரேஸிலில் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 61 பேர் உயிரிழந்தனர்.
கஸ்கெவலில் இருந்து சவோ பவுல் நோக்கி பயணித்த ATR 72-500 விமானமே செங்குத்தாக தரையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத்தில் பயணித்த 57 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் விபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
விமானம் கட்டுப்பாட்டை இழந்து மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகும் காட்சிகள் சர்வதேச ஊடகங்களில் வௌியாகியுள்ளன.
எவ்வாறாயினும், தரையிலிருந்த எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் தீப்பற்றிய நிலையில் தீயணைப்பு படையினரும் பாதுகாப்பு படையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்த போராடியுள்ளனர்.
2010 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானம் விமானத் தகுதி சான்றிதழ் பெற்று சீரான நிலையில் இயங்கி வந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.