Colombo (News 1st) 2024 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தாம் களமிறங்கவுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ இன்று(25) அறிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே நீதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.