Colombo (News 1st) சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான முதலாவது முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 4 விக்கெட்களால் வெற்றியீட்டிது.
தொடரின் முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று(24) ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்களை பெற்றது.
சிறப்பாக பந்து வீசிய இலங்கை அணியின் தலைவி, சமரி அத்தபத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 18.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
விஷ்மி குணரத்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகியோர், தலா 35 ஓட்டங்களை இலங்கை அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.